திருப்பதியில் அக்.4 முதல் பிரமோற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி அக்டோபர் 3ம் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. பிரமோற்சவத்தில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி நான்கு மாடவீதிகளில் வாகன சேவைகள் நடைபெற உள்ளது. அதன்படி, 4ம் தேதி மாலை 5.45 முதல் 6 மணிக்குள் பிரமோற்சவம் கொடியேற்றம் நடக்கிறது. 12ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்றிரவு 8.30 முதல் 10.30 மணி வரை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Related posts

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!