இதுபோன்ற சூழலில் உலகளாவிய அமைதிக்கான அமைப்பின் தலைவரான கே.ஏ.பால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘திருப்பதி லட்டு தயாரிப்பு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் அவசியமற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
கோடிக்கணக்கான பக்தர்களை மனதில் வைத்து, ஒன்றிய அரசு திருப்பதியை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். அரசியல் சர்ச்சைகளுக்காக கடவுள்களை பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமில்லாமல், ஆந்திர மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.