புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதல்


திருமலை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்ேபாது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் கடந்த 5 நாட்களாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 73,104 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 28,330 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.25 கோடி காணிக்கை செலுத்தினர்.

இந்நிலையில் ஏழுமலையானுக்கு விசேஷ நாட்களில் ஒன்றாக கருதப்படும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் திருமலை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாகவே உள்ளது. காலை 8 மணி நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 16 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை