அப்போது பெரும்பாலான பக்தர்கள் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நடந்ததை அறிய முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பெண்களின் கழுத்தில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதன்பின்னர் பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என அவர்கள் மிரட்டினர். 50க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 60 சவரன் நகை, ₹3 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்ததாக தெரிகிறது. இதன்பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நடுவழியில் ரயிலை நிறுத்தி கொள்ளையர்கள் இறங்கி தப்பியோடிவிட்டனர்.
நகை, பணம் கொள்ளை போனதால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் பழைய குற்றவாளிகள் யாரேனும் ஈடுபட்டார்களா? அல்லது வட மாநில கும்பலின் கைவரிசையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.