இதனால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. அறைக்கு வெளியே கிருஷ்ண தேஜா கெஸ்ட் அவுஸ் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகே ஏழுமலையானை தரிசனம் செய்ய இயலும். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
அதிகளவு பக்தர்கள் வருகை காரணமாக தங்கும் விடுதி கிடைக்காமல் கடும் குளிரில் வெட்டவெளியில் காத்திருக்கின்றனர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களிலும் கூட்டம் அதிகளவு உள்ளது. 4 நாள் விடுமுறை முடிந்து நாளை பணிகள் தொடங்கும் என்பதால் ஓரளவு பக்தர்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை 76,104 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 32,412 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹2.92 கோடி காணிக்கை செலுத்தினர்.