Thursday, June 27, 2024
Home » திருப்பதியில் ஆசிரியர் தினத்தையொட்டி குருபூஜோத்சவ விழா ஆசிரியர்களை நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும்

திருப்பதியில் ஆசிரியர் தினத்தையொட்டி குருபூஜோத்சவ விழா ஆசிரியர்களை நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும்

by Lakshmipathi

*அமைச்சர் ரோஜா பேச்சு

திருப்பதி : ஆசிரியர்களை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என திருப்பதியில் ஆசிரியர் தினத்தையொடடி நடநத குருபூஜோத்சவ விழாவில் அமைச்சர் ரோஜா பேசினார்.
திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குரு பூஜோத்சவ விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில சுற்றுலா, இளைஞர், கலாசாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராகவும், எம்.எல்.சி சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியர் வெங்கடரமணா ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமைச்சர் ரோஜா குத்துவிளக்கேற்றி முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழவை தொடங்கி வைத்து பேசியதாவது: ஆசிரியர்களை நாம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாத்ரு தேவோபவ, பித்ரு தேவோபவ, ஆச்சார்ய தேவோபவ, ஆசிரியர்கள் தெய்வீக வடிவங்களாக நம் சமூகத்தில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பதவிகளை மதிக்கும் இந்த சமுதாயத்திலும், படித்த ஆசிரியருக்கு எப்போதும் மிக உயர்ந்த பதவி உண்டு. உங்கள் சிறந்த ஆசிரியர் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பார்கள்.

தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட ஆசிரியர்கள் நம் வாழ்க்கையை மிகவும் வடிவமைத்துள்ளனர் என்று மாணவர்கள் கூறும்போது, ​​அவர்கள் உண்மையான விருதைப் பெற்றதாக உணர்கிறார்கள். விடுதி, வசதிகள், கல்வியில் புதுமையான வழிகளைப் பார்த்து இன்று அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் சிறப்பான கற்பித்தல் வசதிகள் செயல்படுத்தப்பட்டு டிஜிட்டல் கல்வி கிடைத்து வருகிறது. இன்று அரசுப் பள்ளிகளில் சந்திரயான்-3 காணப்படுவதைக் காணலாம்.

நமது மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் கல்வி மேம்பாட்டிற்காக கல்வித்துறையின் மூலம் ₹70 ஆயிரம் கோடி செலவழித்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என நம்பி, கல்வித்துறையில் புதிய போக்கை பெரிய அளவில் கொண்டு வந்துள்ளார். ஆசிரியர்கள் மதிப்புமிக்க கல்வியை வழங்க வேண்டும்.

கடந்த காலங்களில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை, ஆனால் இன்று பெண் கல்வி அவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் என்று முதல்வர் நம்புகிறார், மேலும் பெண் கல்வியை மேம்படுத்தி பெண்களின் முன்னேற்றத்தில் உறுதியாக இருக்கிறார். படித்த ஒவ்வொருவரும் எவ்வளவு பெரிய பதவி வகித்தாலும் தங்கள் ஆசிரியர்களை மறக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

18 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi