அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுவனை வாயில் கவ்வியபடி புதருக்குள் சென்று மறைந்தது. இதை பார்த்த பக்தர்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டதால் மிரண்ட சிறுத்தை சிறுவனை அங்கேயே விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது. சிறுத்தை தாக்கியதில் முகம், கை, கால்களில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வன அலுவலர் சதீஷ் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டும் மலைப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.