ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும்

*முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை

திருப்பதி : ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்திற்கு திருப்பதியை புதிய தலைநகராக அறிவிக்க வேண்டும். ராயலசீமா வளர்ச்சியடைய வேண்டுமானால் திருப்பதியைத் தலைநகராக மாற்ற வேண்டும். தலை நகருக்கு தேவையான இட வசதி ஏர்பேடு முதல் ராப்பூர் வரை ஒரு லட்சம் ஏக்கர் அரசு நிலம் உள்ளதாகவும், பல்கலைக்கழகங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவை உள்ளன.

மாநிலத்தின் பல முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் ராயலசீமா பகுதியை சேர்ந்தவர்கள் ஆனால் குறைந்தபட்சம் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நீரை திசை திருப்ப முடியவில்லை. திருப்பதி தலைநகர் விவகாரத்தில் ஜெகன்மோகன் சந்திரபாபு இருவரும் அவர்களது நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சந்திரபாபு 14 ஆண்டுகளாக மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை.
தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் தனது ஆட்சியில் 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.

மத்தியில் பாஜக கட்சி 370 இடங்கள் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார் ஆனால் 150 முதல் 180 இடங்கள் கூட கிடைப்பது கடினம். இதற்குக் காரணம் நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால், மக்கள் பட்டினி, கடனில் சிக்கித் தவிக்கின்றனர். மக்களின் பொருளாதார நிலை மோசமாக உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை பாதுகாப்பு இல்லை. சிறு வேலைகளை செய்து வாழும் மக்கள் சிரமத்தில் மூழ்கி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!