திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கையில் கைத்தடி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.