மதுரை: திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி நாளை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது. நாளை காலை 5மணி முதல் இரவு 11மணி வரை கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருளுவதையொட்டி நடை மூடப்படுகிறது.