இங்கு விளைவிக்கக்கூடிய உப்பு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறது. குறிப்பாக மீன் பதப்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிகமாக வாங்குகின்றனர். கடந்த ஆண்டு சில பகுதியில் விவசாயம் பொய்த்துப் போய்விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உப்பு சேகரிப்பு பணியில் சேர்ந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இனிவரும் காலங்களில் உப்பளங்களில் விளையக்கூடிய உப்பை, அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும் என உப்பள உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.