திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் பணம் கொடுக்காமல் மிரட்டி உடைகள் வாங்கிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார். ஜவுளிக்கடை உரிமையாளர்கள் அளித்த புகாரில் பிரபல ரவுடி எபினேசரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.