திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் கடல் நீரானது சுமார் 60 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் பாறைகள் வெளியே தெரிந்தது. பின்னர் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. ஆனாலும் பவுர்ணமிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல புனித நீராடினர். கடற்கரையில் கூட்டம் அதிகளவில் இருந்ததால் பாதுகாப்பாக குளிக்குமாறு காவல்துறையினர் ஒலி பெருக்கியில் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.