திருச்செந்தூரில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பக்தர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு திருச்செந்தூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்று காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.