திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்: 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

உடன்குடி: தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான கார்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வந்து குவிந்து உள்ளனர். இதனால் பக்தர்கள் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வாகனங்களை ரதவீதிகளில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று தரிசனம் செய்து விட்டு வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வேல்குத்தி, காவடி எடுத்து, பால்குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தாததால் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் மனவேதனையுடன் பொதுபாதையில் தரிசனம் செய்ய சென்றனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்