திருச்செந்தூர் – நெல்லைக்கு இடையே உள்ள தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை முழுவதும் சேதமடைந்த காரணத்தால் திருச்செந்தூர் – நெல்லை போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தாதன்குளம் பகுதியில் ரயில் பாதை தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே சீரமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது. அதன்படி இன்று 11 மணிக்கு நெல்லையில் இருந்து சோதனை ஓட்டம் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே முற்பகல் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தண்டவாளத்தை மக்கள் கடக்க வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவுத்தியுள்ளது.