திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் வருமானமாக ரூ.2.70 கோடி கிடைத்துள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்களின் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி 8,9 தேதிகளில் உண்டியல் எண்ணிக்கை கோயில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையாளர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் முன்னிலையில் நடந்தது.
இதில் அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையாளர் சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் மற்றும் மக்கள் பிரதிநிதி பார்வையாளர்களாக சுப்பிரமணியன், கருப்பன், மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541 ரூபாய், 1100 கிராம் தங்கம், 29,300 கிராம் வெள்ளி, 80 ஆயிரம் கிராம் பித்தளை, 6,500 கிராம் செம்பு, 2,500 கிராம் தகரம் வருவாயாக கிடைத்துள்ளன. மேலும் 417 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.