தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து கடலில் குளித்த திருப்பூரைச் சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் கருவூர் கிராமத்தில் புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ததை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த 120 பேர் இன்று காலை திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளனர். பழனிசாமி கடலில் இறங்கி குளிக்கும் போது திடீரென அலையில் சிக்கி, இழுத்துச் செல்லப்பட்டார். தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு சடலத்தை மீட்டனர்.