சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் விரைவு ரயிலும் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு பதில் இன்றிரவு தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.