இந்த மனுவில் தான் எக்ஸ் தளத்தில் மாற்று கருத்து பதிவிட்டதாக கூறி, மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட அர்ச்சகர் கோவிலில் பணியாற்றி கொண்டு, அறநிலையத்துறைக்கு எதிராக அவதூறு செயலில் ஈடுபட்டதால் அவரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி புகழேந்தி, கோவிலில் அர்ச்சகராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிடுவதா?. நீங்கள் அரசியல் செய்வதற்கு கோவில் உகந்த இடம் கிடையாது. இது போன்று அரசியல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு அர்ச்சகர் அவதூறு கருத்துக்களை பரப்பினால் பக்தர்கள் இடையே என்ன நிலை ஏற்படும் என்றும் இந்து அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இந்து அறநிலையத்துறை விரிவாக அறிக்கை அளிக்கவும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.