திண்டிவனம்: திண்டிவனத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிமன்றம் ஜன்னல் பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அருகே தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இந்தக் கூட்டில் இருந்த தேனீக்கள் நேற்று திடீரென பறந்து வந்து நீதிமன்றத்தில் இருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்து ஓடினர். இதில் வழக்கறிஞர்கள், போலீஸ் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேனீக்களை அழிக்கும் மருந்தை பீயச்சி அடித்து தேன் கூட்டை முழுவதுமாக அழித்தனர்.