திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர், மருத்துவமனை கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார். வட கொளப்பாக்கம் மைதானத்தில் நொளம்பூர் அணி சார்பில் பந்துவீச சென்ற பாலாஜி மயங்கி கீழே விழுந்துள்ளார். நண்பர்கள் பாலாஜியை மீட்டு மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்