6 மாதத்திற்கு பின்னர் திகார் சிறையிலிருந்து சஞ்சய் சிங் விடுதலை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று இரவு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறைக்கு வெளியே டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், ஆம்ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் உள்பட ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

அவர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய சஞ்சய்சிங்,’ இது கொண்டாடுவதற்கான நேரம் அல்ல, ஆனால் போராடுவதற்கான நேரம். கெஜ்ரிவால் ஜிந்தாபாத். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நமது தலைவர்களும் விரைவில் வெளியே வருவார்கள். சிறை பூட்டுகள் உடைந்து விடும், எங்கள் தலைவர்கள் அனைவரும் வெளியே வருவார்கள்’ என்றார்.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு