அவர்கள் சுப்பிரமணியம், சிமியோன், பாலகிருஷ்ணன் என்பதும் விற்பனைக்காக புலியின் நகங்கள் மற்றும் பற்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்து பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் கைதானவர்களுக்கு நகம் மற்றும் பற்கள் எவ்வாறு கிடைத்தது என்பதும் குறித்தும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.