சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-ராஜஸ்தான் இடையேயான போட்டிக்கு ஏப்.9-ல் டிக்கெட் விற்பனை!!

சென்னை: சென்னை-ராஜஸ்தான் இடையேயான டி20 போட்டிக்கு ஏப்.9-ல் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் ஏப்ரல் 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை நேரில் காண சென்னை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசன்தான் தோனியின் கடைசி சீசனாக கருதப்படும் நிலையில் சென்னையில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியையும் நேரில் காண ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 9ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. C,D,E Lower-ரூ.1,500; D,E Upper-ரூ.3,000; I,J,K Lower-ரூ.2,500; I,J,K Upper-ரூ.2,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்