இதனால் வெட்டிலபாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்குள்ள வீடு ஒன்றின் தோட்டத்தில் நுழைந்த யானை தென்னை மரங்களை கீழே தள்ளி ஆக்ரோஷமாக பிளிறியபடி இருந்தது. இது குறித்த பொதுமக்களின் புகாரை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர். யானையை காட்டுக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேர முயற்சிக்கு பிறகு காட்டு யானை அடர்வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. இதனால் வெட்டிலபாறை பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.