பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் துப்பாக்கியை காட்டினார். குழப்பத்தின் மத்தியில், ஜெகன் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்து மேலே மூன்று ரவுண்டுகள் சுட்டார். பள்ளி நிர்வாகத்தினர் அவரை தடுக்க முயன்றனர், ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இருப்பினும், உள்ளூர்வாசிகளின் மற்றும் பள்ளி ஊழியர்களின் உதவியுடன் அவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு மாணவனை தாக்கும் நோக்கத்தில் ஜெகன் பள்ளிக்கு வந்துள்ளார். ஜெகனை திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி நடைபெற்று வருகிறது. திருச்சூர் நகர குற்றப்பிரிவு ஏசிபி உள்ளிட்டோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.