சென்னை: வண்டலூர், பொத்தேரி, கிண்டியில் ரயில்களில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்தனர். வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரைச் சேர்ந்த பப்பு குமார் (30) உயிரிழந்தார். பொத்தேரி ரயில் நிலையம் அருகே விழுப்புரத்தைச் சேர்ந்த ராமு (40) ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். கிண்டி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் அடிபட்டு 25 வயது இளைஞர் உயிரிழந்தார்.