மதுரை: தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரையை சேர்ந்த சித்ரா என்பவர் அளித்த புகாரில் ரவுடி பேபி சூரியா, அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர். சித்ராவின் ஆபாச படத்தை வெளியிடப்போவதாக ரவுடி பேபி சூரியா மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். ஆக.22ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்ரா அளித்த புகாரில் போலிஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.