இதில் செல்போனை பழுது பார்க்கும் போது, அதில் தாய்ராஜா ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ பதிவு இருந்ததை கடை உரிமையாளர் பார்த்துள்ளார். பின்னர் அவர், தனது நண்பர்களான சிவபாரதி (26), ராஜாஜிநகரை சேர்ந்த சரவணகுமார்(23), காமராஜ்நகரை சேர்ந்த வெங்கடேஷ் (32) ஆகிய மூன்று பேரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் மூன்று பேரும் இந்த வீடியோ பதிவை பார்த்துவிட்டு தாய்ராஜாவை தொடர்பு கொண்டு, உங்களது ஆபாச படங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது.
அதனை தர வேண்டும் என்றால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். தரவில்லை என்றால், அதனை வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்ராஜா, சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தாய்ராஜாவை மிரட்டி பணம் கேட்ட 3 பேரையும் நேற்றுமுன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.