இந்நிலையில், தனது மனைவியை பார்த்து பேசுவதற்கு நேற்றுமுன்தினம் துராபள்ளம் பகுதிக்கு கணவர் நந்தகுமார் சென்றுள்ளார். பின்னர் அன்று மாலை மதுபோதையில் மேனகாவிடம் கணவர் கடும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான கணவர் நந்தகுமார், அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி மேனகாவை குத்த முயற்சித்துள்ளார்.
இதை மேனகாவின் மூத்த சகோதரி அம்பிகா தடுத்தபோது, அவரது கையை நந்தகுமார் வைத்திருந்த கத்தி கிழித்ததில் காயம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமான மற்றொரு சகோதரி ஷோபனா(28), நந்தகுமாரிடம் இருந்த கத்தியைப் பிடுங்கி, அதே கத்தியால் அவரது பின்னந்தலையில் சரமாரி வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த நந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை கத்தியால் சரமாரி வெட்டிய ஷோபனாவை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.