சாலையில் இடதுபுறம் முழுவதும் உப்பு கொட்டியதால் அந்த வழியாக சென்ற பைக்குகள், கார்கள் சற்று தடுமாற்றத்துடன் சென்றது. இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்து சாக்குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உப்பை அள்ளி சென்றனர். மேலும் மணல், உப்பு, ஜல்லி ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தார் பாய் கொண்டு முறையாக மூடி செல்வதற்கு உரிய நடவடிக்கை காவல்துறையினர் எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.