சென்னை: ஈரோடு தொகுதிக்கு விஜயகுமார், பெரும்புதூர் தொகுதிக்கு வேணுகோபால் ஆகியோரை வேட்பாளர்களாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் அறிவித்தார். ஆனால் தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் என்பவருக்காக திருநெல்வேலி தொகுதியை வாசன் கேட்டார்.
ஆனால் பாஜ ஓதுக்காததால் தற்போது தூத்துக்குடியில் போட்டியிட என்.டி.எஸ்.சார்லஸ், விஜயசீலன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. இந்நிலையில், ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ தூத்துக்குடி வேட்பாளராக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார்’’ என்று அறிவித்துள்ளார்.