டெல்லி: தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேர்வான இடம் குறித்து உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது. ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் குறிப்பிட்ட பகுதியை மக்கள் பயன்படுத்த தடை விதித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. படுக்கபத்து, பள்ளக்குறிச்சி, மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.