இத்தேர்ச்சி முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்வு முறைகளில் கேள்விகளையும் எழுப்பி உள்ளதாகவும், தேர்வு முடிவுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தக்கோரியும், ஒன்றிய துறைமுகங்கள் துறை இணை அமைச்சர் சாந்தனு தாகூருக்கு, மதுரை எம்பி கடிதம் எழுதியுள்ளார். அதில், தேர்வு முடிவுகள் குறித்து, மேல்மட்ட விசாரணை நடத்தி அதன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தேர்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.