தூத்துக்குடி: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டது.