சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்மனுதாரர்களின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்க மனுதாரர் ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.