மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐயின் இறுதி அறிக்கை நிராகரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 2018-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி கே.எஸ்.அர்ச்சுனன் சிபிஐக்கு புகார் மனு அளித்தார். துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேலும் பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.