சென்னை: தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “விபத்தில் நட்டார் சாந்தி (50), அமராவதி (58), பார்வதி (35) ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.