தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள மதிகெட்டான் ஓடையில் காட்டாற்று வெள்ளம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் உள்ள மதிகெட்டான் ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓடையில் இருந்து வெள்ளநீர் வெளியேறி உப்பளங்களை மூழ்கடித்ததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். மதிகெட்டான் ஓடையில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தால் புள்ளாவழி கிராமம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக தீவு போல் மாறியுள்ள புள்ளாவழி கிராமத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு

ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்