தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சங்கு குளிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். நாட்டுப்படகில் சென்ற இசக்கிமுத்து என்ற மீனவர் ஆழ்கடல் பகுதியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இசக்கிமுத்து உடலை மீனவர்கள் மீட்டு மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.