தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் ஓட்ட பயிற்சியின் போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் ஓட்ட பயிற்சியின் போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் குலசேகரகோட்டையைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரது மகன் பசுபதி மாரி. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாரிச்செல்வி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. பசுபதி மாரி, தற்போது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கிச் சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கீழ வல்லநாடு வாட்டர் டேங்க் அருகே சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்ட உடன் இருந்த போலீசார், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பசுபதி மாரி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஓட்ட பயிற்சியின் போது காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு