Thursday, June 27, 2024
Home » தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதியில் கோடை குறுவை சாகுபடி நடவு பணிகள்

தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதியில் கோடை குறுவை சாகுபடி நடவு பணிகள்

by Lakshmipathi

*விவசாய தொழிலாளர்கள் மும்முரம்

தோகைமலை : தோகைமலை மற்றும் கடவூர்ஒன்றிய பகுதிகளில் (கோடை) குறுவை சாகுபடியில் நடவு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் கணிசமான அளவில் (கோடை) குறுவை சாகுபடியை தொடங்கி உள்ளனர். தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூரியனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதோி, வடசோி, ஆலத்தூர், பாதிரிபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதே போல் கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் உள்ளது.

ஆண்டுகள் தோறும் பருவ மழை முறைப்படி பெய்து வந்தால் மேற்கண்ட பகுதிகளில் விவசாய பணிகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவார்கள். கடந்த ஆண்டு பருவமழை குறைவால் காவிரியில் நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிரி ஆற்றிலிருந்து கரூர் கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் இருந்து வரும் காவிரிநீர் நிறுத்தப்பட்டது. இதனால் வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ள பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனால் இந்த பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு உள்ள விவசாயிகள் மட்டும் சம்பா சாகுபடியை செய்தனர். இதேபோல் கடவூர்பகுதிகளிலும் போதிய மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தால் கிணற்று பாசங்கள், குளத்து பாசனங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை கணிசமான அளவில் பெய்தது. இதனை அடுத்து கிணற்றுப்பாசன விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்தனர். தற்போது கிணறுகளில் தண்ணீர்இருப்பதால் சம்பா அறுவடை முடிந்த பின்பு குறுவை (கோடை) சாகுபடியை கடந்த மாதம் தொடங்கினர். இதில் அட்ய பொன்னி, கோ 51, எஎஸ்பி 16, ஆடுதுறை 36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து நடவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

கோடை நெல் (குறுவை) மணிகள் 105 நாட்களில் இருந்து 110 நாளில் மகசூல் பெறும் மேற்படி ரக விதை நெல், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1150 முதல் ரூ.1300 வரை தனியார் கடைகளில் பெற்று விதைத்து உள்ளனர். ஒரு ஏக்கருக்கு 45 கிலோ வரை விதை நெல் தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். சம்பா அறுடை பணிகளை முடித்த விவசாயிகள் குறுவை (கோடை) சாகுபடிக்கான நடவு பணிகளை கடந்த மாதம் தொடங்கினர். இந்த நடவு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும் தருவாயில் தீவிரமாக நடந்து வருகிறது.

You may also like

Leave a Comment

ten − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi