மேஷம், கடகம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள்: திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மீனாட்சி – சுந்தரேஸ்வரரை வழிபடுதல் சிறந்த தனவிருத்தி மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை உண்டாக்கும்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள்: புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சித்தர்கள் சந்நதியில் வழிபாடு செய்தல் சிறந்த பலன்களை தரும். சித்தர்களின் ஆசியினால் தனவிருத்திக்கான திட்டங்களை உண்டாக்கச் செய்யும்.
மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள்: வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிவபெருமானை அம்பாளுடன் வழிபடுதல் சிறந்த தனவரவிற்கான பலன்களை தரும். குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள திருத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.