திருவொற்றியூர்: திருவொற்றியூர் முன்னாள் எம்எல்ஏ டி.கே.பழனிசாமி மகள் வழிபேரனும், திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைத்தம்பி – காமாட்சி ஜான்சிராணி ஆகியோரது மகன் அசோக் ஞானசேகருக்கும், திருவொற்றியூர் காமாட்சி ராஜா – புஷ்பலதா ஆகியோரின் மகள் ரோஷினிக்கும் திருவொற்றியூர் புஷ்பம் பழனிச்சாமி திருமணமாளிகையில் வரும் 7ம்தேதி காலை 9.30 மணி அளவில் திருமணம் நடைபெறுகிறது.
விழாவிற்கு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பகுதி அவைத்தலைவர் ஆர்.சி.ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்கிறார். திருமணத்தை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நடத்தி வைக்கிறார். அமைச்சர் பெருமக்கள், எம்பி, எம்எல்ஏக்கள், சென்னை மேயர் பிரியா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா, மற்றும் வணிகர் சங்க பிரமுகர்கள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நாடார் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். மாலை 6 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன் நன்றி கூறுகிறார். திருமணத்திற்கு வருகை தருபவர்களை டிகேபி குழுமத்தின் ஊழியர்கள் வரவேற்கின்றனர்.