திருவில்லிபுத்தூர் கிளைச் சிறைச்சாலை அருகே நள்ளிரவு வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து டிரைவர் ரங்கராஜ், கிருஷ்ணவேணி இருவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய துவங்கியது. இதுகுறித்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரி முத்து செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணமும் எரிந்துவிட்டதாக கிருஷ்ணவேணி தெரிவித்தார். காரில் இருந்த இருவரும் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தால் கிளைச் சிறைச்சாலை பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.