இதில் திரைப்பட வல்லுநர்கள் கலந்துகொண்டு மிகச்சிறந்த கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்கினர். முதல் நாள் முதல் அமர்வில் திரைப்பட நடிகர் ஆர்.டி.பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திரைக்கதை மேம்பாடு, உரையாடல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 2ம் அமர்வில் இயக்குனர் ராஜ்தீப் திரைப்பட இயக்கம் பற்றியும், ஒளிப்பதிவாளர் ரமணன் ஒளிப்பதிவு பற்றிய நடைமுறை ஒளி விளக்கங்கள் பற்றியும் விளக்கினர். மேலும் 2ம் நாள் ரெஜீஷ் திரைப்படத் தொகுப்பு பற்றியும், தரணிபதி ஒலிப் பொறியியல் பற்றியும் விளக்கினர்.
3ம் நாள் சரவணகுமார் விசுவல் எபெக்ட்ஸ் பற்றியும், பிரவீன் குமார் நடிப்பாற்றல் பற்றியும் விளக்கினர். 4ம் நாள் பொது சேவை அறிவிப்பு குறித்து செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது. 5ம் நாள் நடைபெற்ற விழாவில் ஆதவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.