திருவேற்காடு அருகே அயனம்பாகத்தில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 100 சவரன் கொள்ளை

திருவேற்காடு அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளரகா பணியாற்றி வந்துள்ளார். திருவேற்காடு அயனம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மாலை குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் முன் பகுதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கபட்டிருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகளும் ரூ.50,000 ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து உடனடியாக அருகில் இருக்க கூடிய காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவேற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணையானது நடைபெற்று வருகிறது. ஒரு தனி நபர் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த கொள்ளை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது