மதுரை: திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயிலில் தற்போது உள்ள நகைகள் மற்றும் சொத்துக்கள் குறித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம், தங்க நகைகளை அதன் பழைய இடத்தில் வைக்க மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 1992க்கு முன்பு எவ்வளவு நகைகள் மற்றும் சொத்துக்கள் இருந்தன என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியது.