திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வானகார தெருவில் 7 வீடுகளில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் தீப்பிடித்த நிலையில் பலத்த காற்று வீசியதால் அடுத்தடுத்து வீடுகளில் தீ பரவியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.